About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Sunday 28 August, 2011

கிராமத்து சொர்க்கம்





இரவு நிலா வெளிச்சத்தினில்
எல்லோரும் கூடி உணவருந்தும் சுகம்
இப்போது இல்லையே

தாத்தாவும் பக்கத்து வீட்டாரும்
உலகக் கதை பேசும் சுகம்
இப்போது இல்லையே

திருவிழா காலங்களில் ஆண்களும்
கும்மியடித்து மகிழும் காலம்
இப்போது இல்லையே

கார்த்திகை தீபத்திற்கு பெண்களெல்லாம்
ஏரியில் விளக்கு விடுவது
இப்போது இல்லையே

நம் வீட்டு குழம்பு ருசிக்காதபோது 
பக்கத்துவீட்டு குழம்பு வாங்கி சாப்பிடும் சுகம்
இப்போது இல்லையே


வெயில் கால கூரைவீட்டு குளிர்ச்சி
ஏசி போட்ட எந்தன் வீட்டில்
இப்போது இல்லையே

எல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!


39 comments:

  1. //எல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!//

    நகரவாழ்க்கையில் இப்படி எத்தனை சின்னச் சின்ன.சந்தோசங்களை தொலைத்து வாழ்கின்றோம்.

    ReplyDelete
  2. @K.s.s.Rajh

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  3. மீண்டும் கிராமத்தை எண்ணி ஏங்க வைக்கும் கவிதை அழகு.

    ReplyDelete
  4. வெயில் காலத்தில்
    மண்பானையில் வைத்த குளிர்ந்த குடிநீரை
    குடிக்கும் வாய்ப்பு இன்று இல்லையே!!!

    ReplyDelete
  5. தண்ணீர் சோறை வெங்காயத்தையும், மிளகாயையும் கடித்து சாப்பிடும் வாய்ப்பு இல்லையே..

    ReplyDelete
  6. மண்ணின் மரபுகளை
    மீண்டும் எண்ணிப் பார்க்க வைத்த கவிதை!!!!!!!!

    ReplyDelete
  7. கிராமத்து பக்கம் போயி ரொம்ப நாளாச்சுங்க

    ReplyDelete
  8. ஆம் ...உண்மையான வரிகள் .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. உண்மைதாங்க சொர்கத்தோட இன்னொரு பேர் கிராமம்!
    இதை நான் சொந்த ஊருக்கு போகும் போதெல்லாம் உணர்வேன்!
    ninaivootiya pagirvukku nandri!

    ReplyDelete
  10. ஊர் கூடி திருவிழா நடத்துவாங்களே!
    பொது இடங்களில் பிரச்சனைனா அவங்கவங்க கிராமத்துகாரங்க தப்பே செய்திருந்தாலும் விட்டுகொடுக்காம சண்டைக்கு போவாங்களே!..இன்னும் நிறைய....

    ReplyDelete
  11. கிராமத்து சொர்க்கம் என்றுமே நரகத்தில்(நகரத்தில்)கிடைக்காது நண்பா.... பதிவு ஆதங்கம் அருமை நண்பா

    ReplyDelete
  12. //சிவகுமார் said...
    மீண்டும் கிராமத்தை எண்ணி ஏங்க வைக்கும் கவிதை அழகு.//

    தங்கள் வருகைக்கும் கருத்துரௌக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. //முனைவர்.இரா.குணசீலன் said...
    மண்ணின் மரபுகளை
    மீண்டும் எண்ணிப் பார்க்க வைத்த கவிதை!!!!!!!!//
    வெயில் காலத்தில்
    மண்பானையில் வைத்த குளிர்ந்த குடிநீரை
    குடிக்கும் வாய்ப்பு இன்று இல்லையே!!!//

    ஆமாம் முனைவரே, இதுபோல எத்தனையோ சுகங்களை இழந்து நிற்கிறோம். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. //தமிழ்வாசி - Prakash said...
    கிராமத்து பக்கம் போயி ரொம்ப நாளாச்சுங்க//

    கிராமம் எல்லாம் கிட்டதட்ட நகரம் போல மாறிடுச்சி திரு பிரகாஷ். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  15. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ஆம் ...உண்மையான வரிகள் .வாழ்த்துக்கள்.//

    நன்றி சார் தங்கள் கருத்துரைக்கு.

    ReplyDelete
  16. //கோகுல் said...
    உண்மைதாங்க சொர்கத்தோட இன்னொரு பேர் கிராமம்!
    இதை நான் சொந்த ஊருக்கு போகும் போதெல்லாம் உணர்வேன்!
    ninaivootiya pagirvukku nandri!//

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி கோகுல்.

    ReplyDelete
  17. //thirumathi bs sridhar said...
    ஊர் கூடி திருவிழா நடத்துவாங்களே!
    பொது இடங்களில் பிரச்சனைனா அவங்கவங்க கிராமத்துகாரங்க தப்பே செய்திருந்தாலும் விட்டுகொடுக்காம சண்டைக்கு போவாங்களே!..இன்னும் நிறைய....//

    ஆமாங்க, இதுபோல இன்னும் நிறய விசயங்களை இழந்துட்டோம்ங்க thirumathi bs sridhar.

    ReplyDelete
  18. //மாய உலகம் said...
    கிராமத்து சொர்க்கம் என்றுமே நரகத்தில்(நகரத்தில்)கிடைக்காது நண்பா.... பதிவு ஆதங்கம் அருமை நண்பா//

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  19. அனைவரது ஏக்கத்தையும் பதிவாக்கி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. //shanmugavel said...
    அனைவரது ஏக்கத்தையும் பதிவாக்கி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி திரு shanmugavel

    ReplyDelete
  21. அன்பின் காந்தி - கிராமம் கிராமம் தான் - நகரம் நகரம் தான் - இர்ண்டையும் ஒப்பு நோக்கிப் பயனைல்லை. நம் விதி நாம் எங்கு வசிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கிறது. என்ன செய்வது .... நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  22. //cheena (சீனா) said...
    அன்பின் காந்தி - கிராமம் கிராமம் தான் - நகரம் நகரம் தான் - இர்ண்டையும் ஒப்பு நோக்கிப் பயனைல்லை. நம் விதி நாம் எங்கு வசிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கிறது. என்ன செய்வது .... நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  23. //Rathnavel said...
    நிஜம் தான்.//

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  24. ஒளிப்படத்தை பார்த்தவுடன் என்மனம் இருபது ஆண்டுகள் பின்னால் சென்றுவிட்டது..

    எங்கள் வீட்டில் ஒரு சோடி சிவப்பு நிற காளை மாடு மற்றும் டயர் வண்டி( அப்போ மாட்டுவண்டியில் லேட்டஸ்ட் மாடல்) இருந்தது, அப்பா உர மூட்டைகளை ஏற்றி விட்டு மாட்டை வண்டியில் பூட்டி அனுப்பிவிடுவார் பிறகு சந்தையில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு வருவார். மூன்று மைல் தொலைவை ஆட்கள் யாருமில்லாமல் பல வளைவுகளை கடந்து வீடு வந்துசேர்ந்திருக்கும் வண்டி..

    அதற்குப்பிறகு நிறைய மாடுகள் வந்து சென்றுவிட்டன.. ஆனாலும் அந்த சிவப்பு மாடுகளை போல் எதுவுமில்லை....
    தொடரட்டும் உங்கள் கவிதைகள்...

    ReplyDelete
  25. @ குடிமகன்,

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  26. அருமை நண்பரே !

    ReplyDelete
  27. //murugesan said...
    அருமை நண்பரே !//

    மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  28. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர்போலாகுமா. கிராமத்து வாழ்க்கைக்கு இணை ஏதுமில்லை

    ReplyDelete
  29. @அம்பலத்தார்

    ஆமாம் நண்பா, கிராமத்து வாழ்க்கைக்குக் ஈடு இணை ஏதும் இல்லை.

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  30. நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி
    ஆயினும் அதையும் தங்களைப்போல் ரசிக்கவும்
    ரசிக்கத் தக்க அளவில் பதிவாக்கித் தரவும்
    மனமும் அதிக ஈடுபாடும் வேண்டும்
    படங்களும் பதிவும் அருமை

    ReplyDelete
  31. மிக்க நன்றி திரு Ramani அவர்களே.

    ReplyDelete
  32. எல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!/

    படங்களும் பதிவும் அருமை

    ReplyDelete
  33. கடந்தகால நினைவுகள் இங்கு கவிதையானதோ!:......
    அந்த விருந்து உண்ட காலமதை மனம் நினைத்து புளுங்குதோ!:.......அந்த மாட்டுவண்டி என் மனதையும் வாட்டிச் செல்லுது சகோ .
    உங்கள் அழகிய கவிதைக்கு என் பாராட்டுகள் ...................

    ReplyDelete
  34. //இராஜராஜேஸ்வரி said...
    எல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!/

    படங்களும் பதிவும் அருமை//

    தங்கள் முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரி.

    ReplyDelete
  35. //அம்பாளடியாள் said...
    கடந்தகால நினைவுகள் இங்கு கவிதையானதோ!:......
    அந்த விருந்து உண்ட காலமதை மனம் நினைத்து புளுங்குதோ!:.......அந்த மாட்டுவண்டி என் மனதையும் வாட்டிச் செல்லுது சகோ .
    உங்கள் அழகிய கவிதைக்கு என் பாராட்டுகள் ...................//

    அந்த வாழ்க்கை மீண்டும் வராதா என மனம் எத்தனையோ முறை ஏங்கியுள்ளது ஏங்குகிறது. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  36. நண்பரே, சிறந்த கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. @ Ashokkumar.K

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க