About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Saturday 18 February, 2012

வெளிநாட்டு வாழ்க்கை மதில்மேல் பூனை.

 வணக்கம் நண்பர்களே, வெளி நாட்டுக்கு வரனும்னு நினைப்போர் இதைப் படிங்க அல்லது உங்கள் நண்பர் வெளி நாடு வரனும்னு நினைச்சா அவங்ககிட்ட சொல்லுங்க.

                                                               

  நான் சிங்கப்பூரில் வேலைப்பார்க்கிறேன். 6 வருடம் முடிந்து 7 வது வருடம் போய்க்கொண்டு இருக்கிறது. 4 வருடம் முடிந்ததும் சிங்கப்பூர் வேலையே வேண்டாம் என வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து விட்டேன். இந்த நாலு வருடத்தில் பல நண்பர்களுடைய தொடர்பு குறைந்தும் சில நண்பர்களுடைய தொடர்பு துண்டித்தும் போயின.

தொடர்பிலிருந்த ஒன்றிரண்டு நண்பர்களின் உதவியுடன் வேலைத்தேடி அலைந்தேன். 4 மாத அலைச்சலுக்குப் பிறகு ஒருவழியாக சென்னையில் வேலை கிடைத்தது. வேலை கிடைத்துவிட்டது, ஆனால் தங்குவது எப்படி? அதற்கு 3 நாட்கள் அலைந்த பிறகு ஒரு ரூம் வாடகைக்கு கிடைத்தது. வேலைக்கு சென்ற 1 வருடத்திற்குள் திருமணம் முடிந்தது. ஆனால் குடும்பம் நடத்தும் அளவிற்கு அங்கு சம்பளம் தரவில்லை. அதனால் மீண்டும் சிங்கப்பூர் வந்து விட்டேன்.

  முதல் தடவை சிங்கப்பூர் வராமல் நம்ம ஊரிலேயே இருந்திருந்தால் நம்ம ஊரிலேயே நல்ல சம்பளமும் நல்ல கம்பெனியிலும் வேலைக்கு சேர்ந்திருக்கலாம். மற்றும் பல நண்பர்களின் நட்பு கிடைத்திருக்கும், அவர்கள் மூலமாக பல நல்ல கம்பெனிகளுக்கு மாறுதலாகி போயிருக்கலாம்.

அதேபோல வெளி நாட்டில் வேலைபார்த்துவிட்டு நம்மூரில் வேலைதேடும் போது, வெளி நாட்டில் வேலைப்பார்த்ததால் நமக்கு நிறய தெரிந்திருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. அப்படி அவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத போது நமக்கு வேலை கிடைப்பதில்லை.

சரி, வெளி நாட்டிலேயே தங்கிவிடலாம் என்றால், இங்கு வாங்கும் சம்பளம் இங்கேயே செலவுக்குகூட பத்தாது. அப்புறம் எப்படி குடும்பத்துடன் சேர்ந்து இருப்பது. கண்டிப்பாக ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்ற சூழ் நிலையில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

 நண்பர்களே, இந்த மாதிரி நிலமையெல்லாம் வராமலும், சொந்த பந்தங்களுடனும் இருக்கனும் மற்றும் சந்தோசமாகவும் இருக்கனும் என்றால் நம்ம ஊரிலேயே தொடர்ந்து இருக்க முயற்சி செய்யுங்கள். நம்ம ஊரும் தொழில் துறையில் நல்ல வளர்ச்சியடைந்துக்கொண்டு வருகிறது. அதனால் நம்ம ஊரிலேயே வேலை செய்தால் சொந்த பந்தங்களின் விசேஷத்துக்குப் போகலாம், குடும்பத்துடன் பொங்கல் தீபாவளி கொண்டாடலாம். இன்னும் பல சந்தோசங்களை அனுபவிக்கலாம்.

இரண்டு மூன்று வருடம் சம்பாதித்து விட்டு பிறகு ஊரில் வந்து செட்டிலாகிடலாம் என்ற தப்பான கணக்கைப் போட்டு விடாதீர்கள் நண்பர்களே. அப்படி நினைத்து வெளி நாடு வந்தவர்கள் நிறயபேர் மதில்மேல் பூனையாக தான் இருக்கிறார்கள்.