About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Saturday 23 July, 2011

மனிதாபிமாணம், இன்னும் எங்கோ ஒரு மூளையில் இருக்கத்தான் செய்கிறது !!!(வீடியோ இணைப்பு)

       நான் படித்த கல்லூரியில் எனக்கு ஜூனியராக படித்த மாணவன் மனிதாபிமாணத்தை பற்றி ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார், அந்த படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 


      மனிதாபிமாணம் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூளையில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது இந்த குறும்படம்.




வயதான பெரியவர் ஒருவர் ரோட்டில் நடந்து செல்கிறார். நல்ல வெய்யில் நேரம். அந்த நேரத்தில் அந்த வழியே வரும் சில இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரிடம் இவரை ஏற்றிக்கொள்ளுமாறு கேட்கிறார்.


ஆனால் அவர்களோ இவரை ஏற்றாமல் சென்றுவிடுகின்றார்கள். பிறகு மயக்கமடைந்து கிடந்தவரை மூன்று சக்கரத்தில் வரும் ஒரு ஊனமுற்ற பையன் அழைத்து செல்கிறான். காரில் செல்வோருக்கும், மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கும் இல்லாத இரக்க குணம் மூன்று சக்கர சைக்கிளில் செல்லும் பையனுக்கு இருக்கிறது என்பதை சொல்வது தான் இந்த படத்தின் கதை. 


மனதை வருடும் இந்த குறும்படத்திற்கு பின்னனி இசை நம்மை மெய்மறக்க வைக்கிறது. ஓளிப்பதிவு மிகவும் நன்றாகவும் நேர்த்தியாகவும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.  

1 comment:

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க